மாலை நேரத்தில் மாணிக்கச் சுடரொளி வீசும் பரிதியின் மீதுள்ள மோகத்தில்
தன் செவ்விதழ் விரித்து முத்தத்திற்கு காத்திருந்த மந்தாரை மலருக்குத் தெரியாது,
காதலினால் மனங்கிரங்கி தானேயறியாமல் தன் இதழ் சுரந்த செந்தேனை
தேனீக்களும் தேன்சிட்டுக்களும் திருடிப் போனதென்பதை.
-