உளி கண்ட கல்லும் மகுடங்கள் ஏற்கும்... ஒளி சிதறும் விளக்கும் சரம் தொடுத்திருக்கும்... பணம் எடைபோட்டே தரிசனம் தெளிவுபெறும்.... காக்கும் சக்திக்கும் ஓரிடம் உண்டு, வியாபார சந்தையில்....
நிலத்தை நனைத்திட உருவாகும் மேகமொன்று... முதலில் தன்னை குளிரூட்டியிருந்தால்.. இத்தனை பயங்கரத்துடன்.. பால்யத்தை பயமுறுத்தாமல்.. நிலம் வந்து சேர்ந்திருக்குமோ...
ஒற்றை காலால், ஓராயிர நிமிடங்களை தாண்டி.. காத்திருக்கும் கொக்கு... தன் அலகில் சிக்கிய மீனை கொண்டு.., பறந்திடும் அழகில்.. மீன் தான்... வியத்திருக்குமா.. இல்லை பசியாற்றியிருக்குமா...?