யாருமில்லா நேரமது என் மூச்சுக் காற்று சற்று அனலாகயிருக்க உன்னிரு கரம் என் முகம் தாங்கி இதழ் பதிக்க வந்து நீ என் கன்னம் கடித்து காயம் செய்த மாயத்தை எப்படி விலக்கிச் சொல்ல செல்லக் கடிகளில் முத்தத்தில் அடங்காதென்று
ஒரு காதல் என்ன செய்யும் காத்திருக்கும் ஆரத்தழுவும், ஆறுதல் தரும், பிடிவாதம் பிடிக்கும், சண்டையிட்டபின் மண்டியிடும், பேசாதிருக்கும், அழச் செய்யும், கண்ணீர் வற்றும், பிரிந்து செல்ல தோன்றும் இவை யாவும் கடந்து பின்னிறுதியில் கரம் பற்றும்😍