அணைப்பதற்கு.. தீயில்லை அது
ஆதவனைக் காட்டிலும் அடர்வளமது
அவனுக்குக்கென்ன, கொளுத்தி
விட்டு போய்விட்டான்.. ஆனால் அதன்
தாக்கம் கொஞ்சமா நஞ்சமா.. அது!
உலுக்கி எடுக்கிறது அதே சமயம்
உறைய வைக்ககிறது தேட வைக்கிறது
அதே சமயம் தூண்ட வைக்கிறது!
அவளை கண்ணாபிண்ணாமாக
காதலிக்க தோன்றுகிறது..
நான் ஏன் இப்படி
புலம்பி எழுதுகிறேன்
முதலில் நான்
ஏன் உன் கவிதையை
வாசித்தேன்
யார் அந்த
கண்ணம்மா
பாரதி?
எல்லாம்
அவளால் தான்!
-