புதியவன்   (புதியவன்✍️)
2.1k Followers · 1.3k Following

read more
Joined 27 June 2020


read more
Joined 27 June 2020

புதியவன்

-



மறக்காமல் இருக்க
வெறுக்காமல்
பழக வேண்டும்.!!

நினைக்காமல் இருக்க
கடந்திடும் உறவாக
மாறக்கூடாது.!!

சிரிக்காமல் இருக்க
சிதைத்திடும்
வலியாகக்கூடாது.!

மனநோகாமல் இருக்க
மதித்து வாழ்தல்
வேண்டும்.!!

கவலையை கலைந்திருக்க
கலையான மனமிருக்க
வேண்டும்.!!

உள்ளம் மலர்ந்திருக்க
உண்மை நட்பு
வாய்திருக்க வேண்டும்.!!

உறவுகள் பலமாயிருக்க
இதயம் ஈரமாயிருக்க
வேண்டும்.!!

இல்லறம் நல்லறமாயிருக்க
தலைவர், தலைவி
நண்பர்களாகிட வேண்டும்.!!

-



மறக்காமல் இருக்க
மாசில்லா மெய்யுணர்வு
மிகுதியாகும் போது
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யாவிடினும்
மூலகுணம் நினைவு கூறிடும்.!
மென்னுணர்வு இதயத்தில்
மேகமாய் படர்வது
மையலடைவது அமைதியால் மட்டும்.!
மொழியாலும் விளக்க முடியாது
மோகத்தின் உச்சியில் நிகழும்
மெளனத்தை வார்த்தையாலும்
கூற முடியாது.!!

உள்ளம் மட்டும் என்றும்
மறக்காமல் இருக்காது.!!!

-



மறக்காமல் இருக்க
மனதில் பாரமில்லாமல்
இருக்க வேண்டும்.!!

-



யார் அவள். ?

வரிகள் கீழே 👇👇👇

-



பூமியின் எல்லையில்
புதுப்பொலிவுடன்
காட்சியளிக்கிறது மலர்கள்.!!

மலர்களின் புன்னகையும்
மங்கையின் குறுநகையும்
ஓராயிரம் கவிதை சொல்கிறது.!!

கவிதை சொல்லும் கவிதாயினிக்கு
காதல் உணர்வு ததும்பும் போது
வெற்று காகிதம் எழுத்துக்களால்
நிரம்பி விடுகிறது.!!

எழுத்துக்களால் உணர்வை
கடத்தும் கலையில்
திறன் பெற்றோர்களால் காதல்
உணர்வு காவியமாகியது.!!

காவியமான காதலும்
சுயநலமில்லாத அன்பும்
ஈகையான கருணையும்
பூமியின் எல்லை வரை
பரவியிருப்பது உண்மை.!!!

-



பூமியின் எல்லையில்
பூத்து குழுங்கி வரவேற்கிறது
பூக்கள்.!!
இதயத்தின் எல்லையில்
உணர்வு ததும்பி வரவேற்கிறது
காதல்.!!!

-




அடங்கி விடுமா என்ன.? 😭

கீழே வாசிக்கவும் 👇👇👇👇👇

-



யாரென்று தெரியாமல்
முகமறியாமல் செய்திடும்
உதவிகள் மிகப்பெரியது.!!

இதயங்கள் நொறுங்கி
செய்வதறியாது
அமைதியிழந்து தவிக்கும்
ஆன்மாவிற்கு செய்யும் உதவி
அளப்பரியது.!!

துன்பத்தில் துவண்டு
இன்பத்தை கண்டிடாத
துக்கத்தில் தவழ்ந்து
மகிழ்ச்சியை பார்த்திராத
உள்ளங்களுக்கு செய்யும்
சிறிய உதவியும்
பேரூதவியாகிடும்.!!!

அனைத்தையும் இழந்து
சாவின் விளிம்பில்
நின்று கொண்டிருக்கும்
மனதிற்கு செய்யும் உதவி
சொர்கத்தை காட்டிடும்.!!!

-



யாரென்று தெரியாமல்
பயணிக்கும் பயணிகளுடன்
சிநேகம் சிறிது நேரமாயினும்
சிக்கல்களை மறந்து
மகிழ்வோடு பயணித்த அனுபவம்
வாழ்வில் மறக்க முடியாதது.!!!

-


Fetching புதியவன் Quotes