முகம் தெரியாத யாரோ ஒருவரின் வீட்டு தெருவில் வண்டியோட்டி கடக்க முனையும் நொடி பற்ற வைத்தும் வெடிக்காத பட்டாசுக்காய் பயந்து "அண்ணே! பாத்து நே பட்டாசு" எனப் பதறும் கபடமற்ற சிறுவனின் கைகளில் வாழ்க்கை அப்படியே நின்றிருந்திருக்கலாம்....!
யாரோ ஒருவரின் காதல் கதையைப் படித்த அந்த நொடி ஓராயிரம் மைல் தூரத்தில் கடல் கடந்து உறங்கும் உன் கைகளில் என்னை கொண்டு சேர்த்து விட்டது இந்தப் பொல்லாக் காதல்...!