மகளைப் பெற்றெடுத்து
வளர்க்க கொள்ளை ஆசை....
ஆனால் கருவில் இருப்பது
பெண் எனத் தெரிந்தால்
கள்ளிப்பாலோ நெல் மணியோ அதுவரை காத்திடாமல் உடனே
கருக்கலைப்பு செய்திட
உள்ளம் துடிக்கிறது...
அகலிகை தொடங்கி
நிர்பயா ஸ்ரீமதி ஆர்த்தி என
பாலியல் வன்புணர்வுக்கு
இலக்காகி உயிர்களைத்
தொலைத்து ஊடகங்களால்
பேசப்பட்டு மறக்கப்படும்
பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்காமல்
விட்டுவிட்டால்தான் ...என்ன?
மனிதம் புறப்பட்ட
நதிமூலத்தை
நிர்மூலமாக்கிப்
புசிக்கும்
மிருகங்களின் பசிக்குப்
புசிக்க
நாம் ஏன் பெற வேண்டும்
பெண் குழந்தைகளை..,
என்ன கிடைத்துவிட்டது என்று கொண்டாடுவது
உலக பெண்கள் தினத்தை...
செந்நீரே... கண்ணீராக...
இது கவிதையல்ல.... வலி....
-