குழந்தை பருவ நட்பு ஒன்று
இனிமையாய் தொடர..
நூலருந்த காத்தாடியாய் சற்றே பிரிந்தது...
முகம் என்றோ மறந்து போயின் பெயர் என்றும் நினைவில் நிற்க...
காலமோ மெல்ல நகர்ந்தது...
எட்டு வருடங்கள் கடந்து
மீண்டும் பள்ளி வந்த சிறுவயது தோழன்...
ஆனால், அருகில் இருந்தும் பார்க்காமல் போன பாவியாய் அவள் கழித்த ஈராண்டுகள்..
முதல் நாள் கல்லூரி சாலையில் அவனைக் கண்ணெதிரே காண,
நெஞ்சம் ஒன்று திழைத்தது...
ஆனால், அவள் யாரென்றே தெரியாத இளைஞனாய் அவன்...
தினமும் பார்த்துக் கொண்ட கண்கள்
வார்த்தைகள் வாயடைக்கும் தருணங்கள்
நண்பனை அணைத்துத் தழுவ இயலாத பிறவியாய் இன்றும் அவள்..
-