இறுதி மூச்சு இதுவென இழுத்து
பிடிக்க பிடிக்க வெளியேறும்
உயிர் வளியென இந்தப்பிரிவு...
விட்டு விட்டால் கூட விடுதலை
தான்...
தண்ணீரில் தாரையெடுக்கும்
உனக்கும்...
தேங்கிய மழைநீரில் மீன் பிடிக்க
துடிக்கும் எனக்கும்...
வெற்றுக்கூட்டிற்கு இரங்கற்பா
எழுதியே சாகட்டும்
அந்த காதல்...
நமக்கிடையில் பிறந்த ஒரே
பாவத்திற்காக...!
-