புத்தக வனத்தில்
திறந்திருக்கும் மாயலோகம்
இதன் வண்ணங்களில்
மனம் எல்லாம் பூகோளம்
விழி உணரும் மகிழ்வின் மணமோ சூடும் பூ கோலம்
உன்னை வருடும் நெஞ்சில் எப்போதும் சுகம் பரவும்.-
சாலையெங்கும் சருகுகள் நாட்டியம்
சலனம் காட்டும் தென்றலின் சாமரம்
ஈர வனத்தில் மண் எழுதும் கவிதை
கொஞ்சி விளையாடும் இயற்கை
இளைப்பாறல் கேட்கும் பசுமை
இளகிய மனமிரண்டும்
இளமையின் குடையில்
எழிலான காதல் அவர்களின் பிடியில்.-
பட்டாசு ஓசைகள் ஓய்ந்து போனாலும்,
பகிர்ந்திட்ட மகிழ்ச்சி மனதை விட்டு நீங்காதே!
புத்தாடை மணம் கொஞ்சம் குறையக் கூடும்,
புதிய நம்பிக்கை என்றும் குறையாதே.-
தேடும் பதில் கிடைப்பதேயில்லை
மனதின் இரைச்சலை நிறுத்துங்கள்
நிசப்தம் உண்மை மொழி பேசும்.-
மண்ணை முத்தமிடும் துளிகள்
விண்ணை மயக்கும் வாசனை
கண்ணை உருக்கும் இயற்கை அழகு-
தேங்கியக் கண்ணீர்
பார்வையை மறைக்கும்
கொட்டிவிட்டால் காட்சிகள் தெளிவாகிவிடும்-
Whatever gives pleasure
becomes desire.
Desire shows heaven in its path.
The secret trick to realizing discovery is
the illusion of infatuation.
It is an illusion,
but it is okay to have desire
because it gives pleasure.-
A smile that lights the morning sun,
A heart so free, full of fun.
She walks through life with gentle grace,
Happiness shining on her face.-