என் மனதைக் தொட்டதும்
என் உடலைத் தீண்டியதும்
காமமா? காதலா?
காமம் என்றால் கலைந்திருக்கும்,
காதலாய்ப் போய்விட்டது- இன்றும்
கலையாமல் தொடர்கிறது என்மனதில்! இனி,
மௌனங்களில் தொடரும்
என் காதல் காவியம்..!!!
சொந்தம் கொள்ள
வந்து விடாதே
அதற்கும் தகுதியுண்டு..!
இக்காதலுக்கு இனி
முதலும் நான்,
முடிவும் நான்!!!
பிரிவே இல்லை
என்று அகங்காரம் கொண்ட
உன் காதலை காலம்
கொன்றுவிட்டது,
நீயே இல்லாமல்- இனி
உன்னை மட்டும்
காதல் கொள்ளும்- எனை
என் செய்யும் இக்காலம்?
என்னிடம் தோர்க்கத்தான் போகும்..!!
இனி என்றும்
என் மௌனங்களில்
வாழும் இக்காதல் கதை...❤️
-