என் செல்ல மான்/சிங்க குட்டிக்கு❤️
ஆயிரம் துன்பங்கள் இருப்பினும் பெரிதாய் தோன்றவில்லையடா உன் அழகு முகம் காண காத்திருக்கும் தருணங்களில்......
வயிற்றினில் உன்னை சுமக்கையில் பாரமாய் தோன்றவில்லையடா , ஏனெனில் காலமெல்லாம் உன்னை என் நெஞ்சினில் சுமக்க நினைக்கையில்....
நாள் ஒன்றில் பலாயிரம் முறை கற்பனை செய்து கொண்டிருக்கிறேனடா உன்னை கட்டி தழுவி முத்தமழை பொழியும் அந்த நிமிடங்களுக்காக.....
இன்னும் என் வாழ்வில் உடலளவிலும் மனதளவிலும் எத்தனை வலிகள் வந்தாலும் அத்துணை வலிகளையும் நீ வரமாய் மாற்ற வருவாய் என ஒவ்வொரு நாளும் உனக்காக காத்திருக்கிறேன்....
இப்படிக்கு
அம்மா♥️
-