தோல் சுருங்கி நரைகள் நிறைந்தவள் தள்ளாத வயதிலும் தனியே வசிப்பவள் வெறுங்கையுடன் காண சென்றாலும் எப்போதும் என்னை வெறுங்கையுடன் அவள் அனுப்பியதில்லை எனைக் கண்டதும் பொக்கைப் பற்கள் காட்டி அவள் முதிர்ந்த முகம் தெளிக்கும் புன்னகைக்கு ஈடிருந்ததில்லை இதுவரை!
அவள், எனக்கு தந்ததிலும் மிகை என் தந்தை! அவள், ஆச்சரியமான கிழவி என் ஆருயிர் ஆச்சி!
இரவு வானில் கடந்து சென்றிருந்த கார் மேகங்கள் லேசாய் தூரியப் போதும் சில விண்மீன்களை மட்டும் மறைக்காமல் மினுக்கிய படி கண்ணில் தென்பட விட்டிருந்தது தான் இன்று என் மன மகிழ்விற்கு கிட்டிய ஒற்றை காரணம்!!
மழை நனைத்த தலை முடியினை நீ உலர்த்துகையில் நீர் குமுழியொன்று என் மேல் பட சிலிர்த்து தான் போனேன்! நீர் துளியின் ஈரத்தாலல்ல, நிறைந்திருந்த உன் ஸ்பரிசத்தால் மட்டும் தானே!