Hari Nath   (Hari Nath)
504 Followers · 200 Following

Joined 30 August 2019


Joined 30 August 2019
31 MAR AT 22:20

உடைக்கப்படும் எனத் தெரிந்தே
மீண்டும் உன்னிடம் கொடுக்கிறேன் எம்மனதை.
பார்வையில் பட்டு பின் மறைகிறாய்
கானல் நீர் போல.
இனி உன்னிடம் சொல்ல
வார்த்தைகள் இல்லை,
மௌனம் அறிவாய் என நம்புகிறேன்.
உன் விழிகளே பார்த்து
உன் தோளில் சாயும்
சில நிமிடங்கள் போதும்..

-


12 MAR AT 20:25

Letting go of departing hands,
There's no longer a heart to chase.
How easily those who were once everything,
Now pass by with unknown faces.

Without your texts and calls,
I stand, watching days go by.
Just glimpsing their fading footpath,
I walk alone on my path today.

-


23 FEB AT 21:56

எப்படி உன்னிடம் சொல்வேன்?
நீ பேசுவதை கன்னம் மேல்
கை வைத்து பார்த்திருப்பதில்
என் நாள் முழுமை அடைவதை,
நிலவை பார்த்தால் கூட
நினைவில் நீ வருதை,
என் நடை,உடை மாற்றி விட்டதை,
காரணம் இல்லா வெட்கத்திற்கு
அர்த்தம் நீ என்பதை,
எப்படி உன்னிடம் சொல்வேன்..?

-


31 JAN AT 0:07

புயல் வந்து போன பின்பும்,
இருள் மேகம் கிழித்து வந்த
வெளிச்ச ஒளியில்
மீண்டும் ஒரு பூ மலர்கிறது
அதில், வண்ணத்துப்பூச்சி ஒன்று
சுற்றித் திரிவதை வேடிக்கை பார்கிறேன்..

-


4 JAN AT 23:49

'ஐ லவ் யூ' சொல்கிறாய்
ஆனால் முத்தமிட மறுக்கிறாய்
'மிஸ் யூ' என்கிறாய்
சந்திக்க வேண்டாம் என சொல்கிறாய்
கடிதம் எழுதிட சொல்லிவிட்டு
முகவரி தர மறுக்கிறாய்
உன் குரல் கேட்க அழைத்தாலும்,
ரத்து செய்து விடுகிறாய்
உன்னில் தொலைந்த
என்னை மீட்க
என்ன தான் செய்ய வேண்டும்?

-


4 JAN AT 23:35

சில நேரங்களில்
என்னை நானே
வேடிக்கை பார்க்க தோன்றுகிறது
அலாதியான அன்பிற்கு
மனம் ஏங்கும்போதும்,
அவமானங்களை கடந்து
வெற்றிகள் காணும் போதும்,
உடைந்த என்னை
மீண்டெழும் போதும்,
வேடிக்கை பார்க்க தோன்றுகிறது..

-


18 DEC 2023 AT 11:57

உன் விரல்களை
தீண்டியதால் தான்
அந்த மருதானியும்
சிவந்து விட்டதோ?
எதிர்பாராமல்
என் வாழ்வில் வந்தாய்,
இலையுதிர் காலம் வசந்தமாகின
காரிருள் வானம் வானவில்லாகின
உன்னிடம் பேசிய பின்பு
மலரின் மொழியை
கற்றுக்கொண்டேன்!
நீ அருகில்
வந்து அமர்ந்தால்,
துடித்து வழிந்தோடும்
இதயத்தை என்ன செய்வேன்?!

-


13 DEC 2023 AT 1:05

காதோரம் கூந்தலை
சரிசெய்து, சிறு புன்னகையால்
மனதை பறிக்கிறாய்.
உன் நினைவில் மூழ்கி
நித்தம் நிழலாகினேன்.

விழிகள் பார்த்து
விரல்கள் கோர்த்தப் பின்
இதழ்களில் மட்டும்
இடைவெளி ஏனோ?!

-


7 DEC 2023 AT 17:09

நினைவுகள் சுமந்து நிற்கும்
பாடல் ஒன்று
எங்கோ ஒலிக்கும்போது,
நீண்ட நாட்களுக்கு பின்
தொலைபேசியில்
குரல்கேட்கும்போது,
இமைகள் ஓரம் நீர் கமழ்கிறதே
அது,அன்பு 🍁

-


7 DEC 2023 AT 17:02

நதியின் மேல்ஒடும்
இலைக்கு இலக்குகள் இல்லை

மழைநீரில்
காகிதக் கப்பல் விடும்
குழந்தைக்கு, கரை சேருமா
என்ற கவலையில்லை

துடுப்புகளற்ற ஓடத்தை
அலைகள் அழைத்து செல்லும்
அதுபோலத் தான், நானும்...

-


Fetching Hari Nath Quotes