என் வாழ்க்கையில் ஒரு பகுதி அல்ல ;
என் வாழ்க்கையாகவே மாறியது உங்கள் இசை;
அதன் வரிகள் அதனை ஒலிக்கும் உங்கள் குரலும்;
இன்பத்தில் தத்தளித்த போதும்
அமைதியில் முழ்கியபோதும்;
என் உயிரோடு கலந்தது..
நெடுஞ்சாலை பயணங்களில்,
தனித்து செல்லும் இருள் சூழ்ந்த சாலைகளில்,
துணை தேவையில்லை உன் குரல் கேட்கும் வரை;
தூங்காத விழிகளுக்கு தாலாட்டாக ;
விழிகள் வடிக்கும் கண்ணீருக்கு துடைக்கும் கரங்களாக;
சோர்வடைந்த மனதுக்கு பாலமாக ;
பேச நினைத்த வார்த்தைகளும்
வெளிபடுத்த முடியாத உணர்ச்சிகளுக்கும்
உயிர் தந்தது உன் குரல் தான்..
ஆறுதல் அளிப்பவர்
அரவணைப்பவர் கடவுள் என்றால் நீயும் இன்று கடவுள் தான்..
என்றும் இதயத்துடிப்பின் ராகமாக எனக்குள் நிலைத்திருப்பாய்!
-