அன்பை பகிர்ந்து ஆறுதலாய் கூட நின்று இனிய சொற்கள் கொண்டு ஈதல் கற்பித்து உரிமையாய் அதட்டி ஊக்கம் அளித்து எண்ணங்களை உயர்த்தி ஏற்றம் பெற ஐயம் கலைத்து ஒப்புரவு வளர்த்து ஓடமாய் கரை சேர்க்க ஔடதமாய் அறிவுப் பசி போக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
கொரோனா: சிறு குழந்தையாய் பிறந்த நீ ஏனோ அரக்கனாய் மாறி எவ்வித பாகுபாடுமின்றி மனித உயிர்களிடம் தாவிக்கொண்டாய்!!! உலகையே அடிபனிய வைத்தாய்!!! பேரறிவாளர்களையும் பதிலின்றி தவிக்கச் செய்தாய்!!! உன் பசி தீர்க்க ஏனோ பட்டினியாக்கினாய் இவ்வுலகையே..! உயிர் கொல்லியாய் உலா வரும் உனக்கு; இன்னுமா, தீரவில்லை உன் " உயிர்த்தாகம்"???