பெரிய ஸ்கூல்ல சேத்துனா அப்புறம் நம்ம சொல்றத கேக்காது
செல்போன பாத்து கெட்டுபோய்டும்
இண்டெர்நெட்டால கெட்டுப்போய்டும்
நகருக்குள்ள இருக்குற காலேஜ்ல சேத்தா கெட்டுப்போய்டும்
Co ed ல சேந்தா கெட்டுப்போய்டும்
படம் பாத்தா கெட்டுப்போய்டும்
சொந்தக்கார பசங்க கூட பேசுனாலுமே கெட்டுடும்
கெட்டுடும் கெட்டுடும் னு உங்க பொண்ணையே நீங்க நம்புறதில்ல! உங்க முயற்சி அதை தடுப்பதாகவே உள்ளது!
இப்படி அவளை யாரிடம் எப்படி பேசவேண்டும் பழகவேண்டும் என்று உலகமே தெரியாமல், புறாவுக்கு பறக்க சொல்லித்தராமல் வளத்ததுக்கு அப்புறம் அது பருந்துக்கு இரையாவது நிதர்சனம் மட்டுமல்ல, இயற்கையின் நியாயமும் கூட...
சீரழிந்து ஏமாந்து நொந்துபோய் தன் வீட்டில் அடைக்கலம் புகுந்தப்புறம் உற்றமும் சுற்றமும் வந்து கேட்கும், இப்படி "வெவரம்" தெரியாத வளந்துருக்கியே என்று... "விபரம்" மட்டுமாயில்லை! எந்த அனுபவமும் அஸ்திவாரமும் இல்லை... இதற்கு முழு பழியேற்கவேண்டியது பெற்றோர் மட்டுமே...
தற்கொலை செய்தாள்...
துரதிர்ஷ்டவசமாக நான் அந்த பெண்ணாக பிறந்திருக்கவில்லை... உற்றம் சுற்றம் ஒருவர் மிஞ்சாது தீயிட்டு கொளுத்தியொழித்து பழிதீர்த்திருப்பேன்...
-