காலமோ வேகமாய் கரைந்து செல்லுகிறது
நேரமோ உடன் விரைந்து செல்லுகிறது
இரவினிலோ இருளில்லை,
பகலினிலோ ஒளியில்லை
நெருப்பினிலோ அனல்இல்லை,
காற்றினிலோ குளிரில்லை,
கடலினிலோ நீர்த்துளிஇல்லை,
கரையினிலோ மணல்துகளில்லை!
மனதினிலோ மகிழ்வில்லை,
உடலினிலோ உணர்வில்லை
உணர்வினிலோ உயிரில்லை,
உயிரினையே உணரவில்லை
வெறும் மனித சிலையாய்
நித்தம் நகருகிறேன்!
வாழும் நொடிகளில்
தனிமை மட்டுமே
தினம் உணருகிறேன்..!
-